போக்குவரத்து காவலர்கள் மீது மோதிய அரசு பேருந்து – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

 

போக்குவரத்து காவலர்கள் மீது மோதிய அரசு பேருந்து – நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

கூடுவாஞ்சேரி அருகே போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர்கள் இருவர் மீது அரசு பேருந்து மோதிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர்கள் இருவர் மீது அரசு பேருந்து மோதிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே போக்குவரத்தை நேற்றைய தினம் காவலர்கள் சீர் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து காவலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆயுதப்படை காவலர் செல்லதங்கம் மற்றும் சிறப்பு காவல்படை காவலர் அருள் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரை கைதுசெய்துள்ளனர். அவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காவலர்கள் மீது அரசு பேருந்து மோதிய வீடியோ வெளியாகி பார்ப்பவர்கள் மனதை பதற வைத்துள்ளது.