போக்குவரத்து காவலரின் சட்டை கிழியும்வரை அடித்து துவைத்த குடிகார இளைஞர்!

 

போக்குவரத்து காவலரின் சட்டை கிழியும்வரை அடித்து துவைத்த குடிகார இளைஞர்!

திருப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து காவலருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அப்போது தகராறில் ஈடுபட்ட முரளிக்கும் போக்குவரத்து காவலர் பொன்னாங்கண்ணி என்பவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போதையிலிருந்த முரளி போக்குவரத்து காவலரின் சட்டையை கிழத்து சண்டை போட்டார். இந்த தாக்குதலில் போக்குவரத்து காவலர் மற்றும் முரளி ஆகிய இருவருக்குமே காயம் ஏற்பட்டது. தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.