போக்கிரி பட இயக்குநரோடு கைகோர்த்த விஜய் தேவரகொண்டா! 

 

போக்கிரி பட இயக்குநரோடு கைகோர்த்த விஜய் தேவரகொண்டா! 

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டியர் காம்ரெட். பாரத் காம்மா இயக்கத்தில் வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான இந்த படத்தின் வசூல் ஹிட் அடித்தது. 

இந்த நிலையில் அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆம்.. இவர் அடுத்ததாகப் போக்கிரி படத்தை இயக்கிய பூரி ஜெகன்னாத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம். அதுவும் இந்த படத்தை அந்தக் இயக்குநரே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தற்போது இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சார்மி நடிக்கவுள்ளார். முதல் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தைப் பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.