‘போகவேண்டாம் என்று தடுத்த தந்தைக்கு மகள் கொடுத்த தண்டனை’: கதறி அழுத தந்தை!

 

‘போகவேண்டாம் என்று தடுத்த  தந்தைக்கு மகள் கொடுத்த தண்டனை’:  கதறி அழுத தந்தை!

இதனால் பிரியா தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போதும் சம்மதிக்காத சுந்தர் ராஜ் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சுந்தர் ராஜ்.  இவரது மகள் பிரியா. கூலி வேலை செய்து வந்த சுந்தர் ராஜ் தனது மகளை நன்றாக படிக்கவைத்துள்ளார். படிப்பு முடிந்து பிரியா துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

ttn

இதையடுத்து துபாயில் தன்னுடன் வேலை செய்யும்  தோழியின் தந்தை இறந்துவிட்டார். அதனால் சென்னை சென்றுவிட்டு வருவதாகப் பிரியா கேட்டுள்ளார். அதற்கு அவரது சுந்தர் ராஜ், இரவு நேரமாகிவிட்டது செல்லவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் பிரியா தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போதும் சம்மதிக்காத சுந்தர் ராஜ் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

ttn

வீட்டில் தனியாக இருந்த பிரியா விரக்தியில், உருளை கிழங்கு தோட்டத்திற்குப் பயன்படுத்தும் மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனால் மயங்கிக் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்படும் பிரியா பரிதாபமாகப் பலியாகியுள்ளார். மகளின் சடலத்தை பார்த்த சுந்தர் ராஜ், நைட்ல போக வேண்டான்னு சொன்னதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்று கூறி கதறி அழுதார். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.