பொழுது சாயுறதுக்குள்ள என்னென்ன நடக்க போவுதோ? – ப.சி. கவலை!
Aug 5, 2019, 09:53 IST1564979013000
உமர் அப்துல்லா, முஃப்தி, லோன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரவர் வீட்டுச்சிறைகளில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், எல்லாவிதமான ஜனநாயக மரபுகளையும் மத்திய அரசு மீறுவதாக கண்டித்துள்ளார்.
இன்றைய நாள் முடிவதற்குள் காஷ்மீர் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொள்வதற்காக பரபரப்புடன் காத்திருப்பதாகவும், காஷ்மீரில் எந்த ஒரு விஷப்பரீட்சையும் செய்ய வேண்டாம் என தாம் முன்பே எச்சரித்ததையும் மீறி மத்திய அரசு விஷப்பரீட்சையில் ஈடுபட தயாராகி வருவதாகவும் டிவிட்டரில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உமர் அப்துல்லா, முஃப்தி, லோன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரவர் வீட்டுச்சிறைகளில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், எல்லாவிதமான ஜனநாயக மரபுகளையும் மத்திய அரசு மீறுவதாக கண்டித்துள்ளார்.