பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய பார் நாகராஜ் மீண்டும் கைது!
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜாமீனில் வந்த பார் நாகராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஜாமீனில் வந்த பார் நாகராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதாகி பின் ஜாமீனில் வெளிவந்தவர் பார் நாகராஜ். இதனிடையே பார் நாகராஜு க்கு சொந்தமான மதுபான கடைகள் அப்பகுதி மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை சிந்தராபுரத்தை சேர்ந்த ஜிபின் என்பவருக்கும், பொள்ளாச்சி ஊத்துக்காட்டை சேர்ந்த சபரீஷ் என்பவருக்கும் பக் ரக நாய் விற்பனையில் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சபரீஷுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பார் நாகராஜ், ஜிபின் ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் பார் நாகராஜ் உள்ளிட்ட 14 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீசார் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.