பொள்ளாச்சி மாணவி கழுத்தறுத்து கொலை: நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

 

பொள்ளாச்சி மாணவி கழுத்தறுத்து கொலை: நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்!

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காணாமல் போன மாணவி 

pragathi

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் இணைந்துள்ளது கோவை மாணவி கொலை சம்பவம்… தனியார் கல்லூரியில்  பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  மாணவி பிரகதி. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச்  சேர்ந்த இவருக்கும்  காதலர் நாட்டுத்துரைக்கும் இருவீட்டார் சம்மதத்துடன்  சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து பிரகதி கல்லூரி முடிந்து துணிக்கடைக்கு சென்று  வருவதாக கூறிவிட்டு  சென்றதாக கூறப்படுகிறது. 

கழுத்தை அறுத்து கொலை 

murder

கடைக்கு சென்ற பிரகதி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத காரணத்தால் அங்கும் இங்கும் தேடிய அவரது பெற்றோர் காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவியை தேட ஆரம்பித்தனர்.  தாராபுரம் சாலையில்  இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில்  சாலையோரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில்  இறந்து கிடந்த பெண் பிரகதி என்பதை உறுதி செய்தனர். பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பாலியல் வன்கொடுமையா?  காதல் விவகாரமா?

murder

மாணவியின் கொலைக்கு காரணம் ஒருதலை காதல் விவகாரமா அல்லது யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மாணவியின் நகைகள் எதுவும் காணாமல் திருடப்படாததால்  இது வழிபறியால் நடந்த கொலை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மெத்தனம் காட்டிய போலீசார்

kovai

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள  மாணவியின் உறவினர்கள், பிரகதியை காணவில்லை என்று பல்லடம், ஆனைமலை உள்ளிட்ட காவல்நிலையங்களில் புகார் கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை  போலீசார் மெத்தனம் காட்டாமல், துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் எங்கள் பிள்ளையை காப்பாற்றியிருக்கலாம் என்று புகார் கூறி வருகின்றனர்.  

‌பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம், கோவை சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டது  உள்ளிட்ட சம்பவங்கள் கோவையை சுற்றி அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதையும் வாசிக்க: வைரலாகும் சிம்பு வீட்டு திருமண அழைப்பிதழ் : சோகத்தில் சிம்பு ரசிகர்கள்!?