பொள்ளாச்சி போலவே நாகையிலும் பாலியல் சித்ரவதை; கைது செய்யப்பட்ட கால் டாக்சி டிரைவர்

 

பொள்ளாச்சி போலவே நாகையிலும் பாலியல் சித்ரவதை; கைது செய்யப்பட்ட கால் டாக்சி டிரைவர்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ள வேளையில், அதேபோன்ற பாலியல் கொடுமை நாகையில் நடந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ள வேளையில், அதேபோன்ற பாலியல் கொடுமை நாகையில் நடந்துள்ளது.

சென்னையில் கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்தவர் சுந்தர், அங்கிருந்து நாகபட்டினத்துக்கு வேலைக்கு சென்று அங்குள்ள கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் பழகி தன் இச்சைக்கு அவர்களை பயன்படுத்தியுள்ளான். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வேளையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டி வந்திருக்கிறான்.  இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நாகபட்டினம் காவல்துறையில் முறையிட்டதன் பேரில் தற்போது சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளான்.

சுந்தரை தேடியபோது அவன் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை வந்த காவல்துறையினர், சுந்தரை கைது செய்து அவன் மொபைல் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் சுந்தர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் சுந்தரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.