பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சிபிசிஐடி அதிகாரிகளால் குற்றவாளி போல் நடத்தப்பட்ட நக்கீரன் கோபால்?!

 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சிபிசிஐடி அதிகாரிகளால் குற்றவாளி போல் நடத்தப்பட்ட நக்கீரன் கோபால்?!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையிலேயே நக்கீரன் கோபாலை விசாரிக்குமாறும், ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டதற்கு நக்கீரன் கோபால் இன்று சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அங்கே சிபிசிஐடி அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளனர்!

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

nakk

இந்த கொடூர சம்பவத்தை தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்தியவர் நக்கீரன் கோபால். அதனால் இவ்வழக்கில்  நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு  கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து நக்கீரன் கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.  ஆனால் இந்த வழக்கு தொடர்பாகச் சென்னையில் வைத்து மட்டுமே விசாரிக்க வேண்டும். தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

cbcid

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையிலேயே நக்கீரன் கோபாலை விசாரிக்குமாறும், ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார். இந்நிலையில் நக்கீரன் கோபாலை சிபிசிஐடி அதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து நக்கீரன் கோபால், பாலியல் கொடூரம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்கு சிபிசிஐடி டிஎஸ்பி என்னை மிரட்டினார்; சில கேள்விகளுக்கு பதில் சொல்லாததால் சிபிசிஐடி போலீசாரும் மிரட்டினார்கள். விசாரணை என்ற பெயரில் என்னை குற்றவாளி போல நடத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.

 

இதையும் வாசிக்க: பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!