பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்க முடியாது : சிபிஐ

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் அறிக்கை மனுதாரர்களுக்கு வழங்க முடியாது : சிபிஐ

விசாரணை முடியும் வரை பொள்ளாச்சி வழக்கில் கைதான 4  பேரும் சிறையிலேயே இருக்க வேண்டும்

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பொள்ளாச்சி வழக்கின் உண்மையை கண்டறிய உயர்நீதி மன்றம் சிபிஐ சிறப்புக் குழுவை நியமித்தது. கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, விசாரணையின் அறிக்கையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

POLLACHI

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணையின் அறிக்கையை மனுதாரர்களுக்கு அளித்தால், அது பகிரங்கப்படுத்துவது போல ஆகிவிடும். அதனால், மனுதாரர்களுக்கு வழங்கப் போவது இல்லை  என்று தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை குறித்த அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்திற்கு அளிக்கத் தயாராக உள்ளதாகவும், விசாரணை முடியும் வரை பொள்ளாச்சி வழக்கில் கைதான 4  பேரும் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

court

சிபிஐ தரப்பின் வாதத்தைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.  மேலும், இந்த வழக்கின் மறு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.