பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்..! மெத்தனம் காட்டும் காவல்துறை..!?

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போல் இன்னொரு அதிர்ச்சி சம்பவம்..! மெத்தனம் காட்டும் காவல்துறை..!?

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தந்த அதிர்ச்சியில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை,அதுபோல் இன்னொரு சம்பவம் அரங்கேறியிருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தந்த அதிர்ச்சியில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை,அதுபோல் இன்னொரு சம்பவம் அரங்கேறியிருப்பது தற்போது வெளியாகியிருக்கிறது.
 

sexual

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு வந்த கல்லூரி மாணவி ஒருவர்,அதே பகுதியைச் சேர்ந்த இருவர் பெயரைக் குறிப்பிட்டு தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கொடுத்திருக்கிறார்.அந்தப் புகாரின் அடிப்படியில், அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபைனான்சியர் ராஜாவையும் அவரது நண்பர் வேலுமணி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சி சம்பவம் போலவே இங்கேயும் நடந்திருப்பதைக் கண்டு காவலர்களுக்கு அதிர்ச்சி! 
 

sexual

கள்ளக்குறிச்சியில் உள்ள குள்ளகருப்பன் கோவிலுக்கு பக்கத்தில் வரும் காதல் ஜோடிகளை, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முதலில் மறைந்திருந்து வீடியோ  எடுப்பார்களாம்.அதன் பிறகு காதல் ஜோடிகளிடம் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு எடுத்த வீடியோவைக் காட்டி மிரட்டுவதும்,வீடியோவை வெளியிடாமல் இருக்க தங்களோடு இருக்க வேண்டும் என்று மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.இவர்களோடு இருந்ததையும் வீடியோ எடுத்து தொடர்ந்து பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊர்காவல் படையைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
 
குற்றவாளிகள் இருவரின் மொபைலை வாங்கி செக் புண்ணியத்தில்,புகார் கொடுத்த மாணவி தவிர்த்து அறுபதுக்கும் மேலான பெண்களை ஆபாசப் படம் எடுத்து வைத்திருந்த்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.இவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே இதற்கு மேலும் இதை விட்டு வைக்கக்கூடாது என்று முடிவில்தான் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்திருக்கிறார் அந்த மாணவி.
 

sexual

இதில் கொடுமை என்னவென்றால் ஆதாரங்கள் கைக்கு கிடைத்தும் போலீஸார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது,புகார் கொடுத்த மாணவிக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ‘ஃபைனான்ஸியர்’ என்பதால் விட்டு வைத்திருக்கிறார்களோ..!?