பொள்ளாச்சியில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை!  16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!! 

 

பொள்ளாச்சியில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை!  16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!! 

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் மீண்டும் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று காலை பள்ளி மாணவி ஒருவரை காணவில்லை என அவரது தந்தை பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில்,  குமரன்நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞரை காவல்துறையினர் விசாரித்தனர். அதில், திருமணம் செய்து கொள்வதாகக்கூறி சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற அமானுல்லா, தன் நண்பர்கள் 9 பேருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. அந்த சிறுமியை மிரட்டி அமானுல்லாவும், அவரது நண்பர்களும் பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

நேற்று முன் தினம் வீட்டை விட்டு வெளியேச் சென்ற சிறுமியை, அமானுல்லாவின் நண்பர்கள் மிரட்டி காரில் அழைத்து சென்றது தெரியவந்ததையடுத்து, அவர்களை பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டனர். அதற்குள், தகவல் அறிந்து சிறுமியை ஆழியாறு சாலையில் விட்டு இளைஞர்கள் தப்பினர். சிறுமியை மீட்ட காவல்துறையினர், அவர் அளித்த புகாரின் பேரில் அமானுல்லா, பகவதி, முகமது அலி, டேவிட் செந்தில், முகமது ரபிக், அருண் நேரு, சையத் முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாஷா ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபு என்பவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இதுபோன்று வேறு ஏதேனும் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.