பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…ஆயுர்வேத மருத்துவரின் அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்!

 

பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…ஆயுர்வேத மருத்துவரின்  அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்!

ஆயுர்வேத மருத்துவரின் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பொள்ளாச்சி ஏரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

பொள்ளாச்சி : ஆயுர்வேத மருத்துவரின் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பொள்ளாச்சி ஏரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

பொள்ளாச்சி அருகிலுள்ள மெட்டுவாவி கிராமத்தைச்  சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி வனிதாமணி.இவர்களுக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் இருக்கின்ற நிலையில்,ஆறாவது முறையாகவும் கருத்தரித்திருக்கிறார் வனிதாமணி.

baby

ஏற்கனவே இருக்கிற குழந்தைகளை வளர்பதற்கே சிரமமான சூழலில் ஆறாவது குழந்தை பெற்றுக்கொள்வதில் இருவருக்கும் விருப்பமில்லை!அதனால்,இந்த முறை கருக்கலைப்பு செய்துவிடலாம்  என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். 

கர்ப்பமாகி ஐந்து மாதம் ஆன நிலையில் அரசு மருத்துவமனைக்கு சென்றால் திட்டுவார்கள் என்ற  பயத்தில் நினைத்து கணவன்,மனைவி இருவரும் வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியிடம் கருச்சிதைவு செய்ய போன் மூலமாக அணுகி உள்ளனர். 

pregnant

இதையடுத்து மருத்துவர் முத்துலட்சுமி அவரது மகன் கார்த்திக் இருவரும் 28-ந்தேதி,வனிதாமணி வீட்டுக்கு வந்து அவருக்கு ஊசி போட்டுவிட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு பிற்பகல் இரண்டு மணிக்கு வடசித்தூரில் உள்ள தனது கிளினிக்கில் வைத்து மருத்துவர் முத்துலட்சுமி வனிதாமணிக்கு கருக்கலைப்பு சிகிச்சையை ஆரம்பித்திருக்கிறார்.

ஆரம்பித்த சற்று நேரத்தில்,வனிதாமணி உடல்நிலை மோசமானதாகக்  கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,வனிதாமணியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மருத்துவர் முத்துலட்சுமி.

suicide

மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே  வனிதாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக வனிதாமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரை அடுத்து,போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த தகவலை அறிந்த ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியும் அவரது மகன் கார்த்தியும் தலைமறைவாகிவிட்டனர். போலீசார்  அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.