‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு!

 

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’  திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு!

விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில்  நடிகர் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்க, ஐஸ்வர்யா தத்தா, மைம் கோபி, நான் கடவுள்  ராஜேந்திரன், அனித்ரா நாயர், ‘நாடோடிகள்’ சாந்தினி, ஆராத்யா, சான்டிரியா, ஜூலி, ஆதித்யா கதிர், யோகி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

ttn

இப்படத்திற்கு பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய சி எஸ் பிரேம்குமார் படத்தொகுப்பு செய்கிறார்.  ‘தாதா 87’ திரைப்படத்தின் இசையமைப்பாளர்  லியாண்டர் லீ மார்ட்டி இப்படத்திற்கு இசையமைக்கிறார். 
தற்போது இணையதளத்தில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பப்ஜி விளையாட்டு எப்படி இளைஞர்களின் வாழ்வோடு விளையாடி வருகிறது என்பதை முற்றிலும் புதிய கோணத்தில் அந்த விளையாட்டையும் ஒரு பாத்திரமாகக் கொண்டு, ஒரு அதிரடி திரில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

ttn

க்ரைம் திரில்லராக உருவாகிவரும் இந்த படத்திற்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இசை கோர்ப்பு மற்றும் ஒலிப்பதிவு பணிகள், சிங்கப்பூரில் உள்ள அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஆர்டன்ட் ஸ்டுடியோவில், பிரபல ஒலிவல்லுநர் டேனியல் வாங் முன்னிலையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.