‘பொறாமை பட்டு சாவுறதவிட, தில்லா நின்னு பதில் சொல்லு’ : இயக்குநர் சேரன் ஆவேசம்!

 

‘பொறாமை பட்டு சாவுறதவிட, தில்லா நின்னு பதில் சொல்லு’ : இயக்குநர் சேரன் ஆவேசம்!

லாஸ்லியாவை மகளாக நினைத்து சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்தவர் இயக்குநர்  சேரன். லாஸ்லியாவை மகளாக நினைத்து சேரன் கொடுத்த அட்வைஸ், செயல்கள் என அனைத்தும் பாராட்டப்பட்டது.  இருப்பினும்  நிகழ்ச்சி முடிந்து தனிப்பட்ட முறையில் லாஸ்லியா சேரன் வீட்டுக்கு செல்லவில்லை.

cheran

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் சேரனுடன் நட்பிலிருந்த ஷெரின், சாக்ஷி, அபிராமி  மற்றும்  வனிதா ஆகியோர் சேரனை சந்தித்து நட்பு பாராட்டி வருகின்றனர்.ஆனால்  லாஸ்லியா – கவின் ஆர்மியினரோ சேரனை தொடர்ந்து குறை சொல்லி, வசைபாடி வருகின்றனர்.

cheran

இந்நிலையில் இயக்குநர்  சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒருத்தரபாத்து சம்பந்தமே இல்லாம பொறாமை பட்டு சாவுறதவிட ஒழுங்கா உழைச்சு பொழைச்சு போட்டியா வந்து நின்னுகாட்டலாம்ல.முகத்தை காமிக்காம இன்னொரு படத்தைவச்சு ஒளிஞ்சுக்குறதவிட நீ உன் போட்டோவ வச்சு தில்லா நின்னு பதில் சொல்லு அங்க ஆரம்பிக்கும் உன் வெற்றி. இதுக்குமேல பதிலுமில்ல.. பதிவுமில்ல’ என்று பதிவிட்டுள்ளார். 

லாஸ்லியா – கவின் காதலை பிரித்தது சேரன் தான் என்று அவர் மீது கோபத்தில் உள்ள ரசிகர்களுக்குத் தனது பதிவு மூலம் சேரன் பதிலடி கொடுத்துள்ளார்.