பொருளாதார சரிவு இருப்பது உண்மைதாங்க – தமிழிசை சவுந்தரராஜன்!

 

பொருளாதார சரிவு இருப்பது உண்மைதாங்க – தமிழிசை சவுந்தரராஜன்!

பொருளாதார சரிவு என்பது உலகளவில் இருக்கிறது.அதனை சரி செய்யவேண்டும் என்று அரசு முயற்சி எடுப்பதை பாராட்டவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பொருளாதார சரிவு என்பது உலகளவில் இருக்கிறது.அதனை சரி செய்யவேண்டும் என்று அரசு முயற்சி எடுப்பதை பாராட்டவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “அருண் ஜெட்லியின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று என்று சொல்வதை விட இவரை போன்று ஒருவர் இனி வருவது கடினம் என்று தான் சொல்ல வேண்டும்.. உடல்நிலையை பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார். பொருளாதார சரிவு என்பது உலகளவில் இருக்கிறது. அதனை சரி செய்யவேண்டும் என்று அரசு முயற்சி எடுப்பதை பாராட்டவேண்டும். சரிவு என்பது சந்திக்க கூடியது. மேலும் இந்த பின்னடைவை சரி செய்ய வேண்டும்.

Tamilisai

முதல்வர் வெளிநாடுகளுக்கு செல்வது ஆரோக்கியமான முடிவு தான். சொல்கிறார் மோடியை துதி பாடுகிறவர்கள் வெளியே செல்லுங்கள் என்று அழகிரி சொல்கிறார் அப்படி பார்த்தால்  சிதம்பரம் தான் முதலில் மோடியை துதி பாடியவர். தீவிரவாதம் வேரோடு நீக்க வேண்டும். பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் அரசாங்கம் பார்த்துகொள்ளும்” என்று கூறினார்.