பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

 

பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு!

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியோடு நிறைவடைந்தது. அதன் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் உச்சநீதிமன்றத்தால் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ttn

பொன் மாணிக்கவேலுக்கு நீட்டிக்கப்பட்ட ஒரு ஆண்டு பதவிக்காலம் கடந்த 30 ஆம் தேதியோடு நிறைவடைந்ததால், சிலை கடத்தல் தொடர்பாக அவரிடம் இருக்கும் அனைத்து கோப்புகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம்  ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. 

tnj

ஆனால், உச்சநீதிமன்றம் தான் என்னை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமித்ததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்காமல் ஆவணங்களைத் தர முடியாது என்று தெரிவித்தார். அதன் பின், ஆவணங்களை ஒப்படைக்கும் படி கடந்த 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து, பொன்.மாணிக்கவேல் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்ததும் சிடி வடிவில் சமர்ப்பிக்கிறேன் என்றும் நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆவணங்களை ஒப்படைப்பேன் என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் படி அவர் ஆவணங்களை ஒப்படைக்காததால் அவர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.