பொன் மாணிக்கவேலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

பொன் மாணிக்கவேலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகாக பொன் மாணிகவேல் செயல்பட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது

புதுதில்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகாக பொன் மாணிகவேல் செயல்பட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரை மேலும் ஒரு ஆண்டுக்கு உயர் நீதிமன்றம் நீட்டித்தது. அத்துடன், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணையையும் ரத்து செய்தது.

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. தான் சுட்டிக்காட்டும் நபரிடம் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என பொன்.மாணிக்கவேல் கூறுகிறார். எங்களை சுதந்திரமாக பணி செய்ய பொன்.மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. பொய் வழக்கு, பொய் சாட்சியங்களை கைது செய்ய கோரி பொன்.மாணிக்கவேல் மிரட்டுகிறார் என அவர் மீது டி.ஜி.பி. அலுவலகத்திலும் தமிழக காவல்துறை புகார் அளித்துள்ளனர்.

மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேலின் சிறப்பு நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகாக பொன் மாணிகவேல் செயல்பட தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.