பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மீசையை முறுக்குவாரா ஐஜி அன்பு..?

 

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மீசையை முறுக்குவாரா ஐஜி அன்பு..?

பொன்.மாணிக்கவேலுவை சட்ட ரீதியாக சந்திக்க இவர்தான் பொருத்தமானவர் என்று உயர் அதிகாரிகளும், அரசும் கருதுகிறதாம்.

சிலை தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல், உச்ச நீதிமன்ற உத்தரவால் விடுவிக்கப்பட்டார். அந்த பதவிக்கு உடனடியாக ஐஜி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னையில் பூக்கடை துணை கமிஷனர், வடசென்னை இணை கமிஷனராக பணியாற்றியவர். இவர் வேலை செய்த பகுதியில்தான் சென்னை உயர் நீதிமன்றம் வருகிறது.IG Anbu

இதனால் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் அனைவருக்கும் தெரிந்தவராக உள்ளவர். நீதிமன்றம் பற்றிய அனுபவம் உள்ளவர். இதனால் இவர்தான் சிலை தடுப்புப் பிரிவுக்கு சரியான ஆள். மேலும், பொன்.மாணிக்கவேலுவை சட்ட ரீதியாக சந்திக்க இவர்தான் பொருத்தமானவர் என்று உயர் அதிகாரிகளும், அரசும் கருதுகிறதாம். 

இதனால்தான் இவரை தேர்ந்தெடுத்து சிலை தடுப்புப் பிரிவுக்கு போட்டுள்ளார்களாம். இனிமேல், பொன்.மாணிக்கவேல் போன்று அன்புவும் அதிரடியாக செயல்பட்டு பரபரப்பு கிளப்புவார் என்று உயர் அதிகாரிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.