பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி இணையத்தில் வெளியீடு!

 

பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி இணையத்தில் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால்  திரையரங்கில் இப்படம் வெளியாகாது என்பது தெளிவாகியுள்ளது. இதனால் இனி 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் போர்கொடி உயர்த்தினர்.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் 29 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திரையரங்கில் இல்லாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமை பொன்மகள் வந்தாள் பிடிக்கிறது. ஏற்கனவே 1 ஆம் தேதி ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள், சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பால் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.