பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சத்யராஜ் விலகல்!

 

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து சத்யராஜ் விலகல்!

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ponniyin selvan

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது  கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. புகழ்பெற்ற இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்றுவருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சோழ சாம்ராஜ்யத்தின் ஆட்சியை அழகாகவும் அதே சமயம் சில கற்பனை ஊற்றுகளை பொதிக்கும் வண்ணமும் அமைய பெற்றுள்ள இந்த நாவலில், 60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள்  இடம் பெற்றிருக்கும்.  அதில் முக்கியமாக குந்தவை,  வந்தியத் தேவன், பழுவேட்டரையர், பூங்குழலி, ஆழ்வார்கடியான்,  நந்தினி உள்பட கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது. 

mani

இந்த படத்தில் ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய் , விக்ரம், சத்யராஜ் ,அமிதா பச்சன் என பலரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். குறிப்பாக சத்யராஜ் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து  பிரமிக்க வைத்ததால் இந்த படத்தில்  பழுவேட்டரையர்  கதாபாத்திரத்தில் அச்சு அசலாக நடித்து அதற்கு  உயிர்கொடுப்பார் என்று  எதிர்பார்க்கப்பட்டது. 

sathyaraj

இந்நிலையில் பொன்னியின்  செல்வன் படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் விலகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் போது 6 மாதம் நடுவில்  எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டதால் அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாகக்  கூறப்படுகிறது.