பொன்னியின் செல்வன் படத்திற்கு ஓகே சொன்ன பிரபல நடிகை

 

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஓகே சொன்ன பிரபல நடிகை

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாக கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாக கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்றுவதில் பலரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். எம்.ஜி.ஆர். தொடங்கி மணிரத்னம் வரை பலரும் அதை சினிமாவாக்க முயன்று வருகின்றனர்.

ponniyin

அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்,  ஐஸ்வர்யா ராய்,அமிதா பச்சன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

aishwarya

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஒரு ஆங்கில இதழக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பொன்னியின் செல்வன் படத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘ஆம்… நான் மணிரத்னம் படத்தில், நடிப்பது உறுதியாகிவிட்டது’ என்று கூறியுள்ளார்.