பொன்னியின் செல்வனில் இணைந்த ஹிந்தி பிரபலம்! வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்! 

 

பொன்னியின் செல்வனில் இணைந்த ஹிந்தி பிரபலம்! வில்லியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய்! 

பொன்னியின் செல்வன்’ அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. காலப்புகழ் பெற்ற நாவலை படமாக பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

‘பொன்னியின் செல்வன்’ அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. காலப்புகழ் பெற்ற நாவலை படமாக பார்ப்பதற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தாய்லாந்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

ponniyi-selvan-shooting-spot

கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். மிகப் பிரபல கதாபாத்திரனமான வந்தியதேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடிப்பதாக தகவல்கள் வந்தன. நந்தினி என்ற வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருக்கிறார். ராவணன் படத்தில் விக்ரமும் ஐஸ்வர்யாவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan

இந்நிலையில், படத்தில் ‘சோபிதா துலிபாலா’ என்ற ஹிந்தி நடிகை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குச்சிபுடி மற்றும் பரத்நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு இளவரசி வேடத்தில் இவர் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா மற்றும் சோபிதா இருவரும் அவர்களின் கதாபாத்திரத்திற்காக தீவிரமாக பயிற்சியெடுத்து வருகின்றனர். இந்த படம் இந்தியாவின் பெரும்பாலான முக்கிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது