பொது இடத்தில் பிரபாஸ் கன்னத்தை அறைந்த ரசிகை: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
நடிகர் பிரபாஸுடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்த கொண்டு திடீரென்று அவர் கன்னத்தை அறைந்து சென்றார்.
சென்னை: நடிகர் பிரபாஸுடன் விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்த கொண்டு திடீரென்று அவர் கன்னத்தை அறைந்து சென்றார்.
பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதையடுத்து தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிவரும் இந்த படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
சாஹோ பட வேலை தொடர்பாக பிரபாஸ் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றிருக்கிறார். விமான நிலையித்தில் அவரை பார்த்த ரசிகை ஒருவர் ஓடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் போட்டோ எடுத்த சந்தோஷத்தில் அவரை கன்னத்தில் செல்லமாக அறைந்துவிட்டுச் சென்றார். ரசிகை இப்படி அறைவார் என்பதை பிரபாஸ் எதிர்பார்க்கவில்லை,இருப்பினும் கன்னத்தைத் தடவிவிட்டுச் சிரித்துச் சமாளித்தார் பிரபாஸ். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.