பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை – முதல்வர் நாராயணசாமி

 

பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை – முதல்வர் நாராயணசாமி

பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் புதுச்சேரியில் வருகிற 23-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொருட்கள் வாங்குபவர்கள் காலை 7 மணி முதல்  இருந்து 9 மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 9 வரை வெளியே வந்து வாங்கி கொள்ளலாம் என முதல்வர் கூறியுள்ளார்.

ttn

இந்த நிலையில், பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். வீட்டிலிருந்தே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தொலைகாட்சி வாயிலாக நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதாக புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார்.