பொங்கல் ஸ்பெஷல் சமையல்: கல்கண்டு சாதம்
பொங்கலுக்கு கல்கண்டு சாதப் பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்
பொங்கலுக்கு கல்கண்டு சாதப் பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கல்கண்டு: 400 கிராம்
பால்: 1 லிட்டர்
திராட்சை : 10௦
நெய்: 200 கிராம்
முந்திரி : 10௦
பச்சரிசி: 500 கிராம்
ஏலக்காய்: சிறிதளவு தூள்
செய்முறை :
கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும்.
பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து ரவையை போல உடைத்து கொள்ளவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.
இடையிடையே தேவையான நெய்யை சேர்க்கவும்.
பிறகு பொடித்த கல்கண்டை சேர்த்து கல்கண்டு கரைந்ததும் நெய்யால் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யை ஊற்றி நன்கு கலந்து விட்ட பிறகு இறக்கி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பரிமாறினால் சூப்பரான தித்திக்கும் சுவையான கல்கண்டு சாதப் பொங்கல் ரெடி.