பொங்கல் பரிசு விநியோகம் எப்போது?.. வெளியான தகவல் ! 

 

பொங்கல் பரிசு விநியோகம் எப்போது?.. வெளியான தகவல் ! 

முந்திரி, திராட்சை, சர்க்கரை,கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களையும் ரூ.1000 ரூபாய் பணத்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்கவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  பொங்கல் பரிசுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன் படி,  முந்திரி, திராட்சை, சர்க்கரை,கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களையும் ரூ.1000 ரூபாய் பணத்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வழங்கவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

ttn

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் வந்ததால், தேர்தலுக்கு முன்பாகவே பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 9 மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதனால், பொங்கல் பரிசு வழங்கும் பணி 27 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் 2 ஆம் தேதியன்றே வெளியாவதால் வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின்றன. மக்கள் பொங்கல் பரிசை நெரிசல் இன்றி வாங்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள ரேஷன் கடைகளில் தெருக்கள் வாரியாகவோ அல்லது பகுதி வாரியாகவோ பொங்கல் பரிசை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதிக்கு எப்போது பரிசு வழங்கப்படும் என்ற பட்டியலும் ரேஷன் கடைகளில் ஒட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.