பொங்கல் பண்டிகைகளுக்கான அரசு பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம் !

 

பொங்கல் பண்டிகைகளுக்கான அரசு பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம் !

பொங்கலுக்கான வெளியூர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைப் பொறுத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் தங்கி பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இது வரை பொங்கலுக்காக எந்த சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவிக்கவில்லை. பொங்கலுக்கான வெளியூர்களுக்குச் செல்லும் மக்களின் கூட்ட நெரிசலைப் பொறுத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்னரே முன் பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. இதனைப் பயன்படுத்தி, மக்கள் இன்று முதல் பேருந்துகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் பண்டிகைக்காக தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட  நிலையில் அதிக மக்கள் பேருந்துகளுக்கு முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.