பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வருடா வருடம் ஜனவரி 15-ம் நாளன்று பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த வருடமும் வருகின்ற செவ்வாய்க்கிழமையன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை தமிழக நிதி துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.