பொங்கல் தினத்தன்று வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை அதுல்யா

 

பொங்கல் தினத்தன்று வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை அதுல்யா

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் நடிகை அதுல்யா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் நடிகை அதுல்யா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தை திங்கள் முதல் நாளான இன்று, அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி கொண்டாடுகின்றனர். 

pongal

இந்த இனிய நாளில், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதே தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது.

இதற்காக, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை அதுல்யா, தன் ரசிகர்கள் உள்ளிட்ட தமிழர்கள் அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாத்துகளை தெரிவித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

அதில், இந்த வருடம் விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்திருப்பதாகவும், அதை போற்றிப் பாதுகாப்பது நம் அனைவரது கடமை என்றும் அதுல்யா குறிப்பிட்டுள்ளார்.