பைபில் வசனத்தை மறந்த சிறுவனை உயிரோடு புதைத்த பெற்றோர்

 

பைபில் வசனத்தை மறந்த சிறுவனை உயிரோடு புதைத்த பெற்றோர்

பைபில் வசனத்தை மறந்த சிறுவனை அவரது பெற்றோர் உயிரோடு புதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: பைபில் வசனத்தை மறந்த சிறுவனை அவரது பெற்றோர் உயிரோடு புதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக முழுவதும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாய் இருக்கும் காரணிகளில் மதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. டியா மற்றும் டினா தம்பதியின் மகன் ஈதன். பைபில் வசனத்தை ஒப்பிக்க மறந்த சிறுவனை இந்த தம்பதியினர் உயிரோடு புதைத்துள்ளனர். சிறுவன் உயிரிழந்துவிட்டான், இந்த சம்பவம் அமெரிக்காவின் மேனிடோவாக் பகுதியில் நிகழ்ந்துள்ளது. பெற்றோரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது அவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.சிறுவனுக்கு அவர்கள் பாதுகாப்பாளர்களாக செயல்பட்டு வந்திருக்கின்றனர்.

ஈதனை நீண்ட காலமாகவே சித்திரவதை செய்திருக்கிறார்கள். டியா – டினாவின் மூத்த மகனும் இந்த கொடூர சம்பவத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறான். சிறுவனின் உண்மையான தாய் ஆண்ட்ரியா எவரெட், என் மகனின் மரணத்துக்கு நீதி வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.