பைக் மோதியதால் இறந்துபோன நாய்குட்டி அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த தாய்…நெகிழ வைக்கும் சம்பவம்!

 

பைக் மோதியதால் இறந்துபோன நாய்குட்டி அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த தாய்…நெகிழ வைக்கும் சம்பவம்!

நாய் ஒன்று கடந்த மாதம்  5 குட்டிகளை ஈன்றது. இதன் பிறகு சாலையோரத்தில் குட்டிக்களை பத்திரமாகப் பார்த்து வந்தது. 

பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் அண்ணா நகர் பகுதியில் தெருவோரம் சுற்றித்திரிந்த நாய் ஒன்று கடந்த மாதம்  5 குட்டிகளை ஈன்றது. இதன் பிறகு சாலையோரத்தில் குட்டிக்களை பத்திரமாகப் பார்த்து வந்தது. 

tn

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலையோரம் நின்று கொண்டிருந்த குட்டி நாய் மீது, பைக் ஒன்று மோதியதில் அந்த குட்டி நாய் கால் உடைந்து படுத்தப்படுக்கையாக இருந்தது. இருப்பினும் அந்த குட்டியை விட்டுச்செல்லாமல் பால் கொடுத்து அரவணைத்துப் பார்த்து கொண்டது அதன் தாய். 

tt

இருப்பினும் நேற்று  12-ம்தேதி காலை குட்டி நாய் உயிரிழந்தது. அதை கண்டு கண்ணீர் வடித்த அதன் தாய் நாய், அதன்மீது ஈக்கள்  கூட உட்காராமல் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் அதைப் பார்த்துச்சென்றனர்.

அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் தாய் நாயை அங்கிருந்து விரட்டிவிட்டு  இறந்த குட்டி நாயின் சடலத்தை அப்புறப்படுத்தினார். ஆனால்  அவரை பின்தொடர்ந்து சென்ற படி கத்திக்கொண்ட சென்ற அந்த தாய் நாயை அங்கிருந்தவர்கள் பார்த்து கண்ணீர்  வடித்தனர்.

ttn

 தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் ஒன்றுதான் என்பதை இந்த செய்தி நமக்கு உணர்த்துகிறது.