பைக்கில் சென்ற நண்பர்கள்.. பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

 

பைக்கில் சென்ற நண்பர்கள்.. பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த இவர்களை அங்கு வந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் மரிய வின்சென்ட்(20). இவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். வின்சென்ட்டும் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் (24) என்ற இளைஞரும் நண்பர்களாம். இவர்கள் இன்று காலை பைக்கில் விருதாச்சலம் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது  அவர்களின் பின்னால் வந்த கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

ttb

இந்த விபத்தில் வின்சென்ட் மற்றும் அந்தோணிராஜ் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். பின்னர், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த இவர்களை அங்கு வந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் பைக்கின் மீது மோதிய அந்த கார், வேகமாக வந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் நண்பர்களான இரண்டு பேரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.