பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: கடிதத்தால் வெளிவந்த உண்மை!

 

பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்: கடிதத்தால் வெளிவந்த உண்மை!

ஆக்ரா: காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிவானதால் மனமுடைந்த காதலன் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆக்ராவின் ரைபா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் ஷிகார்வர். 22 வயதான இவர் அங்கிருந்த கோயிலிலிருந்து பேஸ்புக் நேரலையில் வந்துள்ளார்.

ஆக்ரா: காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் முடிவானதால் மனமுடைந்த காதலன் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டார்.

ஆக்ராவின் ரைபா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம் ஷிகார்வர். 22 வயதான இவர் அங்கிருந்த கோயிலிலிருந்து பேஸ்புக் நேரலையில் வந்துள்ளார்.

facebook

அப்போது, தான் நான் தற்கொலை செய்யப்போவதாகவும், நான் இறந்த பிறகு விசாரணை என்ற பெயரில் என்னுடைய குடும்பத்தினரை போலீசார் கைது செய்யக் கூடாது. இறந்த பிறகு என் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்ததும் ஷியாமின் நண்பர்களை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் ஷியாம் கோயில் வளாகத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

suicide

இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், ஷியாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது. அதில், எனக் காதலியைப் பிரிந்து வாடுகிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ முடியாது.எ அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கவுள்ளது. அதனால் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். நான் என் வேலையை இழந்தேன்’ என்று எழுதியுள்ளார்.

காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.