பேஸ்புக் காதல்: பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்..!

 

பேஸ்புக் காதல்: பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய சப்- இன்ஸ்பெக்டர்..!

சமூக வலைத்தளங்களின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் என அனைத்திலும் முகம் பார்க்காமல் காதல் மலருகிறது.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளதால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் என அனைத்திலும் முகம் பார்க்காமல் காதல் மலருகிறது. அதில், ஒரு சில காதல் கதைகள் மட்டுமே வெற்றி பெறுகிறது. முகம் பார்க்காமல் வரும் பல காதல் விபரீதத்தில் தான் முடிகிறது. அதே போல, நாகை மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் முகம் பார்க்காமல் மலர்ந்த காதல் கதை ஒன்று விபரீதத்தில் முடிந்துள்ளது.

Social media

திட்டச்சேரியைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் பேஸ் புக்கில் மயிலாடுதுறையில் வசிக்கும் இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளார். நாட்கள் போகப் போக இருவரும் முகம் பார்க்காமலே காதலித்து வந்துள்ளனர். ஒருமுறை கூட நேரில் பார்க்காததால், விவேக் ரவிராஜ் ஒரு நாள் அந்த பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்துச் சென்ற போது இருவரும் நெருக்கமானதால் அந்த பெண் கற்பமாகியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் கர்ப்பமானது தெரிந்தவுடன் பதறிப் போன  விவேக் ரவிராஜ் சென்னைக்குக் கூட்டி வந்து அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.

Facebook

இச்சம்பவத்தின் பின்,  விவேக் ரவிராஜ் அந்த பெண்ணிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.  விவேக் ரவிராஜ் தன்னை ஒதுக்குவதை அறிந்த அந்த பெண் தன்னிடம் பேசுமாறும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும்  கெஞ்சியுள்ளார். ஆனால் அதனை மறுத்த விவேக் ரவிராஜ், திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் நமக்குள் நடந்ததை வெளியே கூறினால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். 

Vivek Raviraj

சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் அந்த பெண்ணை மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து, நாகை மற்றும் சென்னை காவல்துறையில் புகார் அளித்தும் சப்- இன்ஸ்பெக்டர் விவேக் ரவிராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.