பேஸ்புக்கில் படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்த பெண் மார்பி செய்த போட்டோக்களை வைத்து மிரட்டியதால் கைது

 

பேஸ்புக்கில் படங்களை திருடி ஆபாசமாக சித்தரித்த பெண் மார்பி செய்த போட்டோக்களை வைத்து மிரட்டியதால் கைது

தெலங்கானா மாநிலத்தில் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் புகைப்படங்களை திருடி அவதூறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பெல்லாம் பெண்களின் படங்களை ஆண்கள்தான் திருடி அதை மார்பிங் செய்து அதாவது நிர்வாணமாக இருக்கும் நடிகைகளின் படத்துடன் ஒட்டவைத்து மிரட்டி பணம் பறித்து வந்தார்கள். தற்போதை நிலைமை மாறியுள்ளது. பெண் ஒருவரே அந்த வேலையில் ஈடுபட்டு பலரிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் புகைப்படங்களை திருடி அவதூறாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்பெல்லாம் பெண்களின் படங்களை ஆண்கள்தான் திருடி அதை மார்பிங் செய்து அதாவது நிர்வாணமாக இருக்கும் நடிகைகளின் படத்துடன் ஒட்டவைத்து மிரட்டி பணம் பறித்து வந்தார்கள். தற்போதை நிலைமை மாறியுள்ளது. பெண் ஒருவரே அந்த வேலையில் ஈடுபட்டு பலரிடம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

fb

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இவர்கள் தங்களது முகநூல் பக்கத்தில் வைத்திருந்த போட்டோக்களை ஒரு பெண் திருடியுள்ளார். பின்னர் கடைகளில் கிடைக்கும் அல்லது இணையதளத்தில் கிடைக்கும் சில நடிகைகளின் நிர்வாண புகைப்படங்களுடன் இந்த படங்களை மார்பிங் செய்துள்ளார்.
இதற்கிடையே பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்களை தொடர்புகொண்ட பெண்மணி, தான் சைபர் க்ரைம் ஊழியர் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்கள் இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பேச்சுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. 
இதனை அடுத்து, தான் வைத்திருக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி, அந்த படங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என கூறி மிரட்டி, பணம் பறிக்க முயன்றுள்ளார்.

arrest

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து அந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். பணத்தை எப்படி வேண்டுமானலும் சம்பாதிக்கலாம் என்ற அளவிற்கு பெண்களும் யோசனை செய்யும் அளவுக்கு இந்த சமூக சென்று கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.