பேஸ்புக்கால் பிரிந்த குடும்பம்… கணவனும் மனையும் போலி கணக்கில் காதலர்களான கதை!

 

பேஸ்புக்கால் பிரிந்த குடும்பம்… கணவனும் மனையும் போலி கணக்கில் காதலர்களான கதை!

போலியான பெயரில் கணவனும் மனைவியும் பேஸ்புக் காதலர்களாக மாறி வாழ்வில் பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

போலியான பெயரில் கணவனும் மனைவியும் பேஸ்புக் காதலர்களாக மாறி வாழ்வில் பிரிந்து சென்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உபியின் மேற்குப்பகுதி அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவருக்கும்,  பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவன், மனைவி இருவருமே போலி பெயரில் புது புது முகநூல் கணக்கு தொடங்கி, போலி புகைப்படங்கள் பதிந்து அவ்வப்போது புதிய நண்பர்களுடன் உரையாடி வந்துள்ளனர். இருவருக்குள் தொடர்ந்த தீவிர நட்புரையாடல்,  கண்மூடித்தனமான காதலாக மாறியது. தம் காதலின் அடுத்த கட்டமாக நேரில் சந்திக்க முடிவு செய்து, கடந்த ஞாயிறன்று அம்ரோஹாவின் ஒரு உணவு விடுதிக்கு வந்துள்ளனர். வந்த இடத்தில் பரஸ்பரம் சந்தித்த இருவருக்கும் பேரதிர்ச்சி. உணவு விடுதியிலேயே கணவன்-மனைவிக்குள் சண்டை முற்றி இருவரும் பிரிந்து சென்றனர். பின் இரு கிராம பஞ்சாயத்தாரும் கூடி பேசியும் இருவருக்குள்ளும் சமாதானம் ஏறபடாததால், கணவன்-மனைவி தனித்தனியே பிரிந்து வாழ தொடங்கியுள்ளனர்.