பேருந்து நிலையத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்: அதிர வைக்கும் சம்பவம்!

 

பேருந்து நிலையத்திலேயே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்:  அதிர வைக்கும் சம்பவம்!

சமாதானம் செய்ய பலமுறை முயற்சித்தும் அது தோல்வியில் முடிய சிவகுமார் ஆத்திரத்திலிருந்துள்ளார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லரிபாளையம் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி தமிழ் செல்வி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும். 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சிவகுமாரும் தமிழ்செல்வியும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இதையடுத்து சிவகுமார் பரோட்டா மாஸ்டராகவும், தமிழ்செல்வி ஜவுளிக்கடையிலும் வேலைசெய்து வந்துள்ளனர்.

crime

குடும்ப வாழ்க்கை  மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், தமிழ்ச்செல்விக்கு அவரது உறவினர் ஒருவருக்கும்  தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகுமாருக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். ஆனால்  அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத தமிழ்ச்செல்வி கணவருடன் பேசுவதையே நிறுத்தியுள்ளார். அவரை சமாதானம் செய்ய பலமுறை முயற்சித்தும் அது தோல்வியில் முடிய சிவகுமார் ஆத்திரத்திலிருந்துள்ளார்.

murder

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து தனது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையத்தில் தமிழ்ச்செல்வி காத்திருக்க. அவரை பின் தொடர்ந்து போன சிவகுமார், மறைத்து  வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார். இதை கண்டு அங்கிருந்தவர்கள் பதறிப்போகத் தப்பி ஓட  நினைத்தவரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

arrested

மேலும் காயமடைந்த தமிழ்ச்செல்வியை மீட்டு  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தமிழ்ச்செல்விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நிலைகுலைய செய்துள்ளது.