பேராவூரணி மார்க்கண்டேஸ்வரர் கோயில் லட்ச தீப பெருவிழா கோலாகல கொண்டாட்டம் 

 

பேராவூரணி மார்க்கண்டேஸ்வரர் கோயில் லட்ச தீப பெருவிழா கோலாகல கொண்டாட்டம் 

செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் லட்ச தீப பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் அம்மையாண்டி கிராமத்தில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது உள்ளது. இந்த கோயிலில் வருடம்தோறும் புரட்டாசி மாதத்தில் லட்ச தீப பெருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்தாண்டிற்கான விழா நேற்று நடைபெற்றது.

laksha deepam

இத்திருக்கோயிலில் மார்க்கண்டேஸ்வரர் அபிராமி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் நேற்றைய தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 1 லட்சத்து 8 தீபம் ஏற்றும் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி மார்க்கண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.அதனையடுத்து விழாவில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி,சாமி தரிசனம் செய்தனர்.

laksha deepam

 தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு,திரி,எண்ணெய் ஆகியவை கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர் விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் இக்கோயில் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு மார்க்கண்டேஸ்வரரை வழிபாடு செய்தனர்.