பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்!

 

பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்!

கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் உடலுக்குப் பலரும் ரஜினிகாந்த், திருமாவளவன், கி.வீரமணி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவருக்குச் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் இன்று காலை பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறகு மு.க ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும், ஆலோசனை வழங்கவும் தூணாக இருந்த அன்பழகனின் மறைவு ஸ்டாலினை பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளது. 

ttn

கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் உடலுக்குப் பலரும் ரஜினிகாந்த், திருமாவளவன், கி.வீரமணி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். நேரில் வர முடியாததால், திமுக தலைவர் ஸ்டாலினை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.