பேராசிரியர் அன்பழகன் நலமாக உள்ளார்: மு.க.ஸ்டாலின்

 

பேராசிரியர் அன்பழகன் நலமாக உள்ளார்: மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் நலமாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: பேராசிரியர் அன்பழகன் நலமாக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது சிறுநீரக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சிறுநீரக தொற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுச்செயலாளர் பேராசிரியர் நேற்றிரவு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருவதால் உடல்நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டொரு நாட்களில் உடல்நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்-தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.