பேரறிவாளனின் தந்தை வாணியம்பாடியிலுள்ள மருத்துவமனையில் அனுமதி!

 

பேரறிவாளனின் தந்தை வாணியம்பாடியிலுள்ள மருத்துவமனையில் அனுமதி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக வாணியம்பாடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக வாணியம்பாடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் பேரறிவாளனின் தந்தை குயில் தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் அவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரின் தாயார் அற்புதம்மாள் பரோல் வழங்கும் படி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதால் கடந்த 12 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தார். அதன்பின் தனது சகோதரியின் மகள் திருமணத்தின் கலந்துகொண்டார். அவருக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

பேரறிவாளனின் த்ந்தை

இந்நிலையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குயில்தாசனுக்கு இன்று  மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பேரறிவாளனே தனது தந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் பத்திரமாக தனது தந்தையை வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.