பேய் பிடித்தது போல் நாடகம்…பிரம்படியால் வெளிவந்த உண்மை!

 

பேய் பிடித்தது போல் நாடகம்…பிரம்படியால் வெளிவந்த உண்மை!

ஒருவரை  அழைத்து வந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக கூறியுள்ளனர். 

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர்  திருநங்கை மதுரா.  இவர் அப்பகுதியில் அருள்வாக்கு கூறி வருகிறார். இந்நிலையில் மதுராவிடம் இளம்பெண் ஒருவரை  அழைத்து வந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக கூறியுள்ளனர். 

ttn

இதையடுத்து அந்த பெண்ணை பார்த்த போது அவருக்கு பேய் பிடிக்கவில்லை என்பஹே கண்டுபிடித்த திருநங்கை மதுரா அவரை பிரம்பால் அடித்துள்ளார். பிரம்படி  தங்காமல் இளம்பெண் உண்மையை கூற ஆரம்பித்துள்ளார். அதாவது அந்த பெண் இளைஞர் ஒருவரை  காதலிப்பதாகவும், வீட்டில் காதலுக்கு சம்மதம் கூறவில்லை என்றும் வேறு இடத்தில் மாப்பிள்ளை  பார்த்துவிட்டனர். அதை தடுக்கவே பேய் பிடித்த மாதிரி நடித்தேன் என்றும் கூறி  அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். இதன் பின்னர்  காதலனை மறந்துவிட வேண்டும் என்று கூறி கற்பூரம் அடித்து மதுரா சத்தியம் கேட்க அந்த பெண்ணும் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். 

ttn

இந்நிலையில்  அந்த இளம் பெண் மீண்டும் கடந்த சனிக்கிழமை திருநங்கை மதுராவை சந்தித்து  ஆசி வாங்கிவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.