பேயாக மாறி சாக்ஷியைக் கொலையைச் செய்த வனிதா: என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டிற்குள்?
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு கடந்த இரண்டு சீசன் போல் டாஸ்க் கொடுப்பதில்லை. இரண்டு வாரம் கடந்த நிலையில் போட்டியாளர்கள் சண்டை மட்டுமே போட்டுக்கொள்கிறார்கள் டாஸ்க் எப்போ தான் கொடுப்பிங்க என்று கேள்வி கேட்டாக ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த வாரா luxuary பட்ஜெட் டாஸ்க் சற்று கலகலப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், வனிதாவை அழைத்த பிக் பாஸ், ‘நீங்க தான் இந்த வீட்டின் கொலையாளி, முதலில் நீங்கள் கொலையைச் செய்ய வேண்டிய நபர் சாக்ஷி என்றும், அவரின் மேக் அப்பை அவரே கலைக்க வேண்டும்’ என்று டாஸ்க் கொடுக்கிறார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day16 #Promo1 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/iXQ1FzV3d9
— Vijay Television (@vijaytelevision) July 9, 2019
அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்ட டாஸ்க, சாக்ஷியிடம் சூசகமாகப் பேசி வனிதா அவரை கொலை செய்துவிடுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த டாஸ்க் மூலம் வனிதாவை இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்து காப்பாற்ற பிக் பாஸ் பிளான் போடுவது போல் தெரிகிறது.