பேனை பெருமாளாக்குறது வனிதாவுக்கு ஒன்னும் புதுசு இல்ல: ஷெரின் பக்கம் நிற்கும் கஸ்தூரி

 

பேனை  பெருமாளாக்குறது வனிதாவுக்கு ஒன்னும் புதுசு இல்ல: ஷெரின் பக்கம் நிற்கும் கஸ்தூரி

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

vanitha

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  மேலும்  பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று சாக்ஷி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன்  ஆகியோர்  ஆகியோர் வந்துள்ளனர்.  அதில்  வனிதா ஷெரினிடம் , ‘தர்ஷன் நீ பழகுறத வைச்சு நான் அந்த வார்த்தையை சொன்னது வந்து மக்களுக்கு நான் போன அப்போ புரியல. ரெண்டு வாரம் கழிச்சு புரிஞ்சிருக்கு. அதோட பிரதிபலிப்பு தான் தர்ஷன் வெளியே போனது என்று கூறினார். 

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வனிதா மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் ,  நான் கற்பனை உலகத்துல இருந்தேன்னு சொல்லவே முடியாது யாராலும்.. நீ போய்  லவ் லெட்டர் எழுதுவியா? என்று கேட்க,  மறுபுறம் கஸ்தூரி ஷெரினிடம், ஈர பேனாக்கி பேன பெருமாளாக்கி,  விஷயத்தை ஊதி ஊதி  பெருசாக்குறது இந்த வீட்ல புதுசா என்று சமாதானம் சொல்கிறார். மீண்டும் வனிதா, நான் இந்த விஷயத்தை சொல்லும் போது  என் மேல தப்பாச்சு.. ரெண்டாவது வாரம் அவன் போயிருக்கன்னா தோராயமான கமெண்ட்ஸ் மட்டும் தான் நம்மளால படிக்க முடியும். அத வைச்சு  தான் நம்மள எவிக்டே  பண்ணுறாங்க’ என்று சொல்கிறார். ஒருபுறம் ஷெரின் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியாது’ என்று கூறி கதறி அழுகிறார். 

 

இன்னும் பிக் பாஸ் முடிய சில நாட்களே உள்ள நிலையில் வனிதா மீண்டும் வந்து கலவரத்தை தூண்டியிருப்பது பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.