பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்- சூர்யா வேண்டுகோள்

 

பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்- சூர்யா வேண்டுகோள்

அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை பள்ளிகரணை அருகே சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் மேலே விழுந்ததால், இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலராக இருந்துவரும் ஜெயகோபாலின் மகள் திருமணத்திற்கு வைக்கப்பட்ட பேனர் தான் சுபஸ்ரீயின் மீது விழுந்து அவரது உயிர் பிரிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஜெயகோபால் மீது பள்ளிகரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

banner

இந்நிலையில் நடிகர் சூர்யா, “அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். பேனர்கள் வைப்பதற்கு பதிலாக பள்ளிகளுக்கு உதவுங்கள்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.