பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா! மாமனார் என்றும் பாராமல் அடித்துக்கொலை செய்த மருமகன்! 

 

பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா! மாமனார் என்றும் பாராமல் அடித்துக்கொலை செய்த மருமகன்! 

அரியலூர் அருகே மதுபோதையில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தாவை அவரது மருமகன் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அரியலூர் அருகே மதுபோதையில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தாவை அவரது மருமகன் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவில்எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(61). இவருக்கு பாக்கியராஜ் என்ற மகனும், ஜான்கிலின் ரிட்டா என்ற மகளும் உள்ளனர். ஜான்கிலினின் மகள் கிரிஜாவை தனது தம்பி பாக்கியராஜுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில், செல்வராஜ் தனது பேத்தியும், மருமகளுமான கிரிஜாவிடம் மதுபோதையில் அத்துமீறியுள்ளார்.

rape

இதனைப்பார்த்த கிரிஜாவின் தந்தையும், செல்வராஜீன் மருமகனுமான டிசோசா முங்கிலால் செல்வராஜை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற வெங்கானூர் காவல் துறையினர் டிசோசாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.