‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி டீம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ ஷூட்டிங் நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தில் சுப்புராஜ் இயக்கி வந்த ‘பேட்ட’ திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்தது. மல்டி ஸ்டாரர் படமான பேட்ட படத்தில், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நவாசுதின் சித்திக், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திட்டமிட்டதை விட 15 நாட்களுக்கு முன்பாகவே ஷூட்டிங்கை முடித்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
It’s a wrap for #Petta. 15 days ahead of schedule. I thank @sunpictures @karthiksubbaraj @DOP_Tirru and the entire team Involved. Here’s Wishing everyone a very happy #Vijayadashami ??
— Rajinikanth (@rajinikanth) October 19, 2018
அதைத் தொடர்ந்து ‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ’பேட்ட’ ஷூட்டிங் முடிந்ததை நடிகை த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
And its a wrap ?? #teamPetta #Petta pic.twitter.com/WyzpizWQk6
— Trish Krish (@trishtrashers) October 21, 2018
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியதையடுத்து, படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.