பேட்ட பட வில்லனோடு கைகோர்த்த தமன்னா!

 

பேட்ட பட வில்லனோடு கைகோர்த்த தமன்னா!

நடிகை தமன்னா பேட்ட பட வில்லனோடு ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

சென்னை: நடிகை தமன்னா பேட்ட பட வில்லனோடு ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிஸியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படம் விரைவில் வெளிவரவுள்ளன.

இதற்கிடையில் இவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ஹாரர் காமெடி திரைப்படம் ஆனந்த்தோ பிரம்மா. இந்தப் படம் தற்போது இந்தியில் பொலே சுடியன் என்ற பெயரில் தயாராகிறது. இதில் நவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். 

நவாசுதீன் சித்திக் சகோதரர் ஷாமாஸ் நவாப் சித்திக் இயக்கவிருக்கும் இந்த படத்தில் ‘இமைக்கா நொடிகள்’ பட வில்லன் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கி 45 நாள்கள் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் நவாசுதீன் சித்திக், ‘பேட்ட’ படத்தில் ‘சிங்காரம்’ என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

nawab

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தமன்னா, ‘வெகுஜன பாலிவுட் படம் ஒன்றில் பல்வேறு பரிமாணங்கள் உள்ள கதாபாத்திரத்தில் நான் நடிப்பது இதுவே முதல் முறை. கதையின் மையக்கரு என்னை வெகுவாக ஈர்த்தது. சமூகத்தில் இப்போது நடைபெறும் பிரச்சினையைக் குறித்து திரைக்கதை அமைந்துள்ளது. நான் எவ்வாறு இருப்பேனோ அது போலவே எனது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது போன்ற சோதனை முயற்சியில் நான் முதன்முறையாக இறங்குகிறேன்’ என்று கூறியுள்ளார்.