‘பேட்ட’ தலைப்பு இப்படி தான் உருவானது? கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்!

 

‘பேட்ட’ தலைப்பு இப்படி தான் உருவானது? கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்!

எனது எல்லா படங்களுக்குமே கடைசிக் கட்டத்தில் தான் தலைப்பு யோசித்து வைத்திருக்கிறேன் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை: எனது எல்லா படங்களுக்குமே கடைசிக் கட்டத்தில் தான் தலைப்பு யோசித்து வைத்திருக்கிறேன் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். 80களில்  இருந்த ரஜினியை மீண்டும் திரையில் கண்ட அனுபவம், உண்மையிலேயே ரஜினி ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது. சர்வதேச அளவிலும் பேட்ட வசூல் சாதனை படைத்துள்ளது.

petta

இந்நிலையில் ‘பேட்ட’ என்ற வித்தியாசமான தலைப்பு குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். அதில், ‘ முதலில் படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. எனது எல்லா படங்களுக்குமே கடைசி கட்டத்தில் தான் தலைப்பு யோசித்து வைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் முதலிலிருந்தே படத்தின் தலைப்பு என்ன என்று கேட்டுக் கொண்டே இருப்பார். எனக்கு பதட்டமாக ஆரம்பித்துவிட்டது. நான் நிறைய சொல்லுவேன். அவருக்குப் பிடிக்காது. 

petta

அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் திடீரென பேட்ட என்ற தலைப்பை சொன்னேன். அவர் அதை தனக்குள் பல முறை சொல்லிப்பார்த்துக் கொண்டார். சூப்பர் சார் என்று கை கொடுத்தார். பின் இது பெயராக வர வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு தான் பேட்ட வேலன் என்ற பெயரை நாங்கள் யோசித்தோம்’ என்று கூறியுள்ளார்.